பறவை இனங்களில் ஆந்தையின் முட்டை மாத்திரமே உருண்டை வடிவில் இருக்கும்.
இரவு வேளைகளிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தாவரங்கள் துளசியும் அரசமரமும் தான்.
இலங்கையில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டு 2003 நவம்பரில் மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் பதிவாகி விற்பனைக்கு வந்த கார் மைக்கரோ ஆகும்.
முதலையில் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூ்ஃப்" உடை தயாரிக்கிறார்களாம்.
உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடு இந்தோனேசியா.
பல பாடல்களைப் படைத்த பாரதியார் தாலாட்டுப் பாடல்களைப் பாடவே இல்லை.
93 நாடுகளில் ஒரே நேரத்தில் விற்பனையாகி புத்தக உலகில் சாதனன படைத்த "ஹரிபொட்டர்" புத்தகத்தை எழுதியவர் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் ஆகும்.
மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது?
மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில்
ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன.
இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது.
இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது.
இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.
இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும்.
______________________________________
டைனமிட் வெடி பொருளைக் கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல். அதனால் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றும் கண்டுபிடிப்பின் மூலம் தீமைகளே அதிகம் இருப்பதை உணர்ந்து நிம்மதி இழந்தார். பின் தனக்குக் கிடைத்த பணத்தை விஞ்ஞானிகளைக் கெளரவிக்க நோபல் கமிட்டியை உருவாக்கினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், சமாதானம் ஆகியவற்றுக்கு நோபல் பரிசும் இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் நினைவுப் பரிசும் அளிக்கப்படுகிறது.
நோபல் கமிட்டி நான்கு வேறுபட்ட நிறுவனங்கள் உள்ளடக்கிய அமைப்பாகும். இயற்பியல், வேதியியல், பொருளாதாரத் துறைகளை ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்விஸ் அகாடமி தேர்வு செய்கிறது.
காரோலின்ஸ்கா நிறுவனம் மருத்துவத்துக்கும் ஸ்விஸ் அகாடமி இலக்கியத்துக்கும் நோபல் கமிட்டி அமைதிக்கும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்கிறது..
பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம்.
* ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.
*உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள்.
*நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது.
* ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள்.
* ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம்.
* பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது.
நன்றி:இன்று ஒரு தகவல்.பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்
தகவல் களஞ்சியம்-II
Labels: தகவல் களஞ்சியம்-II
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment